டுவிட்டர் கணக்கால்... பிரித்தானிய பல்கலைக்கழக மாணவிக்கு வெளிநாட்டில் கடுமையான தண்டனை
பொதுமக்களின் அமைதியை குலைப்பதாக தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றச்சாட்டு
தண்டனை காலத்தை 34 வருடங்களாக அதிகரித்து 34 வருடம் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவின் லீட்ஸ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தமது டுவிட்டர் கணக்கால் தற்போது 34 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
லீட்ஸ் பல்கலைக்கழக மாணவியான சவுதி அரேபியாவை சேர்ந்த 34 வயது சல்மா அல் ஷெபாப் என்பவரே தற்போது டுவிட்டர் கணக்கால் சொந்த நாட்டில் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
@esohr
அவரது டுவிட்டர் கணக்கானது பொதுமக்களின் அமைதியை குலைப்பதாகவும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து தமது டுவிட்டர் பக்கத்தில் குரலெழுப்பி வந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான அல் ஷெபாபுக்கு முதலில் 6 ஆண்டுகள் மட்டுமே இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்முறையீடு செய்த நிலையில் சவுதி அரேபியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றமானது தண்டனை காலத்தை 34 வருடங்களாக அதிகரித்துள்ளது.
@esohr
மேலும், அடுத்த பேரிடியாக தண்டனை காலம் முடிவுக்கு வந்த பின்னர் 34 வருடம் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் போராளிகளுக்காக அல் ஷெபாப் ஆதரவளித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லீட்ஸ் பல்கலைக்கழக மாணவியான அல் ஷெபாப் சவுதி அரேபியாவில் விடுமுறையை கழித்து வந்த நிலையில், 2021 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவர் ஷியா இஸ்லாமியர் என்பதாலையே, கைதானதும் கடுமையான சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளதும் என நம்பப்படுகிறது.