லண்டனில் முதியவர் படுகொலை! 42 வயது கொலையாளி கைது
லண்டன், லெவிஷாம் பகுதியில் உள்ள பிரபலமான பப் ஒன்றில் நடந்த கொடூரமான தாக்குதலில் 63 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் தொடர்புடைய 42 வயது நபர் கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு 8:39 மணியளவில் லெவிஷாம் ஹை ஸ்ட்ரீட்டில் பயங்கரமான தாக்குதல் நடந்ததாக பெருநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து வந்த பொலிஸார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மூத்தவரை மீட்டனர்.
தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெவிஷாமில் உள்ள பிரபலமான "தி வாட்ச் ஹவுஸ்" என்ற ஜே.டி. வெதர்ஸ்பூன் பப்பில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டையே இந்த கொடூர கொலைக்கு காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 42 வயது நபர் தற்போது தெற்கு லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |