வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் புடின் கூறிய அப்பட்டமான பொய்கள்
வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் அப்பட்டமான புளுகு மூட்டைகளாக அவிழ்ந்து விட்டிருக்கிறார் புடின்.
உக்ரைனை ஊடுருவியபோது எளிதாக வெற்றி பெற்று விடலாம் என தப்புக் கணக்குப் போட்டுவிட்ட ரஷ்ய ஜனாதிபதியான புடின், உக்ரைன் தலைநகரைக் கூட கைப்பற்ற இயலாத நிலையில், தனது வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் போது, தன் மக்கள் முன் பல புதிய கதைகளை கூறியுள்ளார்.
அதாவது, உக்ரைனின் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவ நீண்ட நாட்களாக திட்டமிட்டதாகவும், ஆகவே, ரஷ்யா தனது பாதுகாப்புக்காகத்தான் இப்போது போரிட்டு வருகிறது என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார் புடின்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் போரை ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் போல தன் மக்கள் முன் படமிட்டுக் காட்டிய புடின், நேட்டோ அமைப்புதான் பிரச்சினைக்கு காரணம் என்றும், தான் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும் முயற்சியாகத்தான் உக்ரைனில் சிறப்பு இராணுவ ஆபரேஷன் ஒன்றை நடத்தி வருவதாகவும் கதை விட்டுள்ளார் புடின்.
உக்ரைனில் நடக்கும் நியோ நாஸி ஆட்சிக்கு எதிராக தான் தாக்குதல் தொடங்கியது மட்டுமே தன்னால் எடுக்க முடிந்த சரியான முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்து அவர் கூறியுள்ள பொய், தாங்கள் வெற்றியைக் கொண்டாடுவதாக கூறியுள்ளது. காரணம், ரஷ்யா இன்னமும் உக்ரைனில் பல தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது. பேரிழப்புகளுக்குப் பின்னும் அவரது படைகள் அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளதால் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதற்கு ஏராளம் ஆதாரங்கள் இருந்தும், தாங்கள் நியாயப்படிதான் போர் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவர் செய்த ஒரே நல்ல விடயம், Kyiv மீது தான் அதிகரப்பூர்வமாக போர் தொடுப்பதாக கூறாமல் விட்டதுதான்! அப்படி அவர் செய்திருந்தால், இன்னமும் போர் உக்கிரமாகியிருக்கக்கூடும்.
அத்துடன், புடினுடைய 'Doomsday jet' என்னும் விமானத்தையும் அணிவகுப்பில் காணவில்லை. அப்படி அணு ஆயுத தாக்குதலின்போது கட்டளைகளை பிறப்பிக்கப் பயன்படுத்தப்படும் அந்த விமானம் அணிவகுப்பில் இணைந்திருந்தால், அணு ஆயுத போர் குறித்த ஒரு கலக்கம் உருவாகியிருக்கக்கூடும்.
ஆக, தான் எதிர்பார்த்தது போல உக்ரைனைக் கைப்பற்ற முடியாததால் தனது வெற்றிவிழாக் கொண்டாட்ட உரையில் பொய்களை அவிழ்த்து விட்ட புடின், கொஞ்சம் யோசிப்பது போலவே தெரிகிறது.
இருந்தாலும், வெற்றி கிடைக்காத அவமானத்தில் அவர் அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.