மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு: முக்கிய பரிசீலனைகள்

By Fathima Oct 15, 2025 05:39 AM GMT
Report

வாழ்க்கை முழுவதும் நாம் குடும்பத்திற்காக உழைக்கிறோம். குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களின் பிள்ளைகள் மற்றும் வாரிசுகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் ஆசையாகும். ஆனால் வயது அதிகரிக்கும் போது மருத்துவச் செலவுகள், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற சிக்கல்கள் அதிகரிக்கின்றன.

இதனால் அவர்கள் சேமித்திருக்கும் சொத்து குறைந்து போகும் அபாயம் உள்ளது. இந்நிலையில், ஆயுள் காப்பீடு ஒரு பாதுகாப்பு வலையமாக மாறுகிறது. இன்றைய காலத்தில் டிஜிட்டல் காப்பீட்டு சேவைகள் அதிகரித்துள்ளன.

உதாரணமாக Acko போன்ற நிறுவனங்கள், காப்பீடு தொடர்பான தகவல்களை ஆன்லைனில் எளிதாக பெற வழிவகுக்கின்றன. இதனால், மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மிகச் சுலபமாக காப்பீடு பற்றிய விரிவான விவரங்களை அறிந்து முடிவெடுக்க முடிகிறது.

சரியான ஆயுள் காப்பீட்டை எடுப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில் குடும்ப நிம்மதிக்கான மிக முக்கியமான படியாகும்.

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு என்பது வெறும் நிதி பாதுகாப்பு அல்ல, அது மன அமைதியையும் வழங்குகிறது. தங்கள் மறைவுக்குப் பிறகு குடும்பம் சிக்கல்களில் சிக்காமல் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒன்று. அதனால்தான், வயது அதிகரித்தாலும் காப்பீடு எடுப்பது முக்கியமானதாகிறது.

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு: முக்கிய பரிசீலனைகள் | Life Insurance Policy For Older People

மூத்தவருக்கு ஆயுள் காப்பீடு ஏன் தேவை?

மூத்த குடிமக்கள் பெரும்பாலும் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி வாழ்கிறார்கள். ஆனால் இந்தியாவில் எல்லோருக்கும் ஓய்வூதியம் கிடைக்காது. தனியார் துறையில் வேலை செய்தவர்கள் ஓய்வூதியமில்லாமல் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஆயுள் காப்பீடு குடும்பத்திற்கு கூடுதல் ஆதரவாக அமைகிறது. குறிப்பாக திடீர் மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினர் நிதி சிக்கலில் சிக்காமல் இருக்க உதவும்.

மருத்துவச் செலவுகள் மூத்தோரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகின்றன. வயதானவர்களுக்கு இருதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இத்தகைய சூழலில், மருத்துவச் செலவுகளை சமாளிக்க காப்பீடு பெரும் பங்காற்றுகிறது. இல்லையெனில் குடும்பத்தினர் தங்களின் சேமிப்புகளை முழுமையாக மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மேலும் காப்பீட்டின் மூலம் சொத்து மற்றும் நிதி பராமரிப்பு சுலபமாகிறது. வாரிசுகளுக்கு பாதுகாப்பான முறையில் நிதி கிடைக்கிறது. தங்கள் பிள்னளகள் அல்லது பேரக் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க மூத்தோர் ஆயுள் காப்பீட்டை தேர்வு செய்கிறார்கள்.

மூத்த குடிமக்கள் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

வயது வரம்பு மற்றும் சவால்கள்

மூத்த குடிமக்கள் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது வயது வரம்பாகும். பல காப்பீட்டு நிறுவனங்கள் 60 முதல் 75 வயது வரை பாலிசிகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் 80 வயது வரை வழங்கினாலும், பிரீமியம் மிக அதிகமாக இருக்கும். எனவே, 60 வயது அருகில் காப்பீடு எடுப்பது சிறந்தது.

வயது அதிகரிக்கும்போது காப்பீடு பெறுவது சவாலாக மாறுகிறது. காரணம், மருத்துவ பரிசோதனனகள் கடுமையாக இருக்கும். பெரும்பாலும், இதய சோதனை, சர்க்கனர சோதனை, இரத்த அழுத்த சோதனை ஆகியனவ கட்டாயமாக்கப்படுகின்றன. பலருக்கு இந்த சோதனைகளில் பிரச்சினைகள் இருப்பதால், காப்பீட்டு நிறுவனம் பிரீமியத்தை அதிகரிக்கவோ அல்லது பாலிசியை மறுக்கவோ செய்யும்.

மேலும், வயது அதிகரிக்கும் போது காத்திருப்பு காலமும் அதிகரிக்கும். பல நிறுவனங்கள் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் வைத்திருக்கும். இந்த காலத்தில் மரணம் அல்லது தீவிர நோய் ஏற்பட்டால் காப்பீட்டு நன்மை கிடைக்காது.

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு: முக்கிய பரிசீலனைகள் | Life Insurance Policy For Older People

காப்பீட்டு தொகை(Sum Assured)

மூத்தோருக்குக் கிடைக்கும் காப்பீட்டு தொகை (sum assured) பொதுவாக குறைவாகவே இருக்கும். இளம் வயதில் காப்பீடு எடுப்பவர்களுக்கு கோடிகளில் தொகை கிடைக்கலாம். ஆனால் மூத்தோருக்கு பொதுவாக ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். இதுவும் நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப மாறுபடும். காப்பீட்டு தொகையைத் தேர்வு செய்யும் போது குடும்பத்தின் நிதி தேவைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.

உதாரணமாக, குடும்பம் மாதம் எவ்வளவு செலவிடுகிறது. எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான கல்வி செலவு அல்லது மருத்துவச் செலவுகள் எவ்வளவு இருக்கலாம் என்பதனை மதிப்பீடு செய்ய வேண்டும். அதன்படி சரியான தொகையைத் தேர்வு செய்தால் தான் காப்பீடு பயனுள்ளதாக இருக்கும். சில நிறுவனங்கள் Guaranteed Return Plans அல்லது Senior Citizen Plans மூலமாக நிரந்தர நிதி ஆதரவு தருகின்றன. இத்தகைய திட்டங்கள் முதலீடு + காப்பீடு ஒருங்கினணந்த வடிவமாக இருக்கும்.

பிரீமியம் செலுத்தும் முறை

வயது அதிகரிக்கும் போது காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருக்கும். 65 வயது நபர் எடுக்கும் பாலிசி மற்றும் 75 வயது நபர் எடுக்கும் பாலிசி இடையே பெரிய வித்தியாசம் இருக்கும். அதனால், மூத்தோர் விரைவில் காப்பீடு எடுப்பது நன்மை தரும். பிரீமியம் செலுத்தும் முறையில் பல்வேறு வகைகள் உள்ளன.

மாதாந்திரம், காலாண்டு, அரைஆண்டு அல்லது வருடாந்திரம் செலுத்தலாம். மூத்தோரின் வருமானம் குறைவாக இருப்பதால், மாதாந்திரம் அல்லது காலாண்டு முறையைத் தேர்வு செய்வது நல்லது. இது நிதிசுமையைக் குறைக்கும். சில திட்டங்களில் "Single Premium Plan" என்பதும் உள்ளது. அதாவது, ஒரே தடவையில் பெரிய தொகையை செலுத்தி முழு பாலிசி காலத்திற்கும் பாதுகாப்பு பெறலாம். ஓய்வூதிய தொகை அல்லது சேமிப்புகளை வைத்து இதைச் செய்ய முடியும்.

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு: முக்கிய பரிசீலனைகள் | Life Insurance Policy For Older People

மருத்துவ பரிசோதனை மற்றும் நிபந்தனைகள்

மூத்தோருக்கான காப்பீட்டில் மருத்துவ பரிசோதனை பெரும்பாலும் கட்டாயம். இருதய சோதனை, இரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு போன்றவை சோதிக்கப்படும். நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், பலருக்கு காப்பீடு மறுக்கப்படலாம் அல்லது அதிக பிரீமியம் விதிக்கப்படலாம்.

சில காப்பீட்டு நிறுவனங்கள் "No Medical Test Policy" என்ற பெயரில் பாலிசி வழங்கினாலும், அவற்றில் காப்பீட்டு தொகை குறைவாக இருக்கும். மேலும், காத்திருப்பு காலம் நீளமாக இருக்கும். இதனால், உடனடி நன்னமகள் கினடக்காது. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக படித்து, புரிந்து கொண்டு கையொப்பமிட வேண்டும். சிறு எழுத்துக்களில் எழதப்பட்ட தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றை தவிர்க்கக்கூடாது.

காப்பீட்டு வகைகள்

1. கால ஆயுள் காப்பீடு

Term Life Insurance என்பது மூத்தோருக்கு கிடைக்கும் மிகக் குறைந்த செலவிலான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் (உதாரணம் 10, 15 அல்லது 20 ஆண்டுகள்) காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

அந்தக் காலப்பகுதியில் பாலிசி வைத்திருப்பவர் உயிரிழந்தால், குடும்பத்தினர் காப்பீட்டு தொகையைப் பெறுவார்கள். ஆனால் காலம் முடிந்த பிறகு பாலிசி நிறைவடைந்து விடும், அப்போது எந்தவித தொகையும் திருப்பித் தரப்படாது.

இத்தகைய திட்டம், குறிப்பாக 60–70 வயதுக்குள் உள்ள மூத்தோருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். காரணம், குறைந்த பிரீமியத்திலேயே குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு கிடைக்கும். உதாரணமாக, குடும்பத்தில் இன்னும் கடன் இருப்பின், அல்லது பிள்ளைகளின் கல்வி செலவு போன்ற பொறுப்புகள் நிறைவடையாமல் இருந்தால், இந்த வகை காப்பீடு குடும்பத்தினனர நிதிசுமையிலிருந்து காப்பாற்றும்.

ஆனால் Term Plan-க்கு சில குறைகள் உள்ளன. காலம் முடிந்த பிறகு எவ்வித நிதி நன்னமயும் கினடக்காது. எனவே, “நான் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் குடும்பத்திற்கு ஏதாவது நன்னம கிடைக்க வேண்டும்” என்று விரும்பும் மூத்தோருக்கு இது சிறந்த விருப்பம் அல்ல.

2. முழு ஆயுள் காப்பீடு

Whole Life Insurance என்பது பெயருக்கேற்றவாறு, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரும் திட்டமாகும். இந்த திட்டத்தில், பாலிசி வைத்திருப்பவர் 99 வயது வரை காப்பீட்டின் கீழ் இருப்பார். மரணம் எந்த வயதில் நடந்தாலும், குடும்பத்தினர் காப்பீட்டு தொகையைப் பெறுவார்கள்.

அதனால், இது குடும்பத்திற்கு நிரந்தரமான பாதுகாப்பு அளிக்கும் ஒரு வகை. இந்த வகை காப்பீட்டின் மிகப் பெரிய நன்னம, அது “எப்போது வேண்டுமானாலும்” செயல்படக் கூடியது. Term Plan போல கால வரம்பு இல்லை. எனவே, மூத்தோர் இறுதி வரை மன அனமதியுடன் இருக்கலாம்.

மேலும், சில Whole Life திட்டங்களில் loan facility அல்லது bonus additions போன்ற கூடுதல் நன்மைகளும் இருக்கின்றன. ஆனால், Whole Life Insurance-க்கு பிரீமியம் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக 65 வயதிற்குப் பிறகு எடுப்பவர்களுக்கு, பிரீமியம் செலுத்தும் சுமை அதிகமாகும்.

அதனால், வருமானம் குறைந்த மூத்தோருக்கு இது சவாலாக இருக்கலாம். இருந்தாலும், குடும்பத்திற்கு நிரந்தர நிதி பாதுகாப்பு வேண்டுமெனில், இந்த திட்டம் சிறந்ததாகும்.

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு: முக்கிய பரிசீலனைகள் | Life Insurance Policy For Older People

3. மூத்த குடிமக்கள் திட்டங்கள்

Senior Citizen Plans என்பது மூத்தோருக்காவே தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள். இவை பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே வழங்கப்படும். இதன் சிறப்பம்சம், சில திட்டங்களில் Critical Illness Cover உடன் வரும்.

அதாவது, புற்றுநோய், இருதய நோய், ஸ்ட்ரோக் போன்ற தீவிர நோய்கள் கண்டறியப்பட்டால் கூடுதல் நிதி ஆதரவு கிடைக்கும். இந்த வகை காப்பீடு, மூத்தோரின் வாழ்க்கைத் தேவைகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், மருத்துவ பரிசோதனை கட்டாயமாக இருக்கும்.

ஆனால் சில நிறுவனங்கள் குறைந்த அளவிலான காப்பீட்டு தொகைக்காக “No Medical Test Policy” எனும் திட்டத்தையும் வழங்குகின்றன. இது உடல்நிலை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்.

Senior Citizen Plans பெரும்பாலும் குறுகிய காலத்திற்கானவை. பிரீமியம் அதிகமாக இருந்தாலும், காப்பீட்டு பாதுகாப்புடன் கூடுதல் மருத்துவ நன்மைகள் கிடைப்பதால், 65–75 வயதுக்குள் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த வகையை தேர்வு செய்கிறார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகம் இருக்கக்கூடும் என்ற நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

4. உத்தரவாதமான வருவாய் திட்டங்கள்

Guaranteed Return Plans என்பது காப்பீடு + முதலீடு இரண்னடயும் ஒருங்கிணைக்கும் திட்டம். இதில், மூத்தோர் பிரீமியம் செலுத்தும் போது, வாழ்நாள் முடிவில் அல்லது பாலிசி காலம் முடிவில் ஒரு உறுதியான தொகை திருப்பித் தரப்படும்.

அதே சமயம், உயிரிழப்பு ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகையும் கிடைக்கும். இத்தகைய திட்டம் மூத்தோருக்கு ஓய்வூதியம் போன்ற நிதி ஆதாரம் தரும். சில திட்டங்களில் மாதாந்திரம் அல்லது ஆண்டுதோறும் நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், குடும்பத்தின் வாழ்வு பாதிக்காமல், மூத்தோர் தங்களின் மருத்துவச் செலவுகள் அல்லது தனிப்பட்ட தேவைகளை தாங்களே நிர்வகிக்க முடியும். ஆனால் Guaranteed Plans-க்கு ஒரு குறை உண்டு. மற்ற திட்டங்கனள விட பிரீமியம் அதிகமாக இருக்கும். மேலும், முதலீட்டு லாபம் அதிகமாக இருக்காது. ஆனாலும், பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் தேடும் மூத்தோருக்கு இது சிறந்த விருப்பமாக கருதப்படுகிறது.

சரியான திட்டத்தை தேர்வு செய்வது எப்படி?

ஒவ்வொரு காப்பீட்டு வகைக்கும் தனித்தன்மைகள் உள்ளன. கால திட்டம் குறைந்த செலவில் தற்காலிக பாதுகாப்பு தரும், முழு ஆயுள் காப்பீடு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரும், மூத்த குடிமக்கள் திட்டங்கள் மூத்தோருக்காகவே தனிப்பட்ட நன்னமகளுடன் இருக்கும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருவாய்த் திட்டங்கள் பாதுகாப்புடன் முதலீடு லாபத்தையும் தரும்.

மூத்தோர் தங்கள் உடல்நினல, குடும்பத்தின் நிதி நிலை, எதிர்காலத் தேவைகளை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, “குடும்பத்திற்கு மரணத்திற்கு பின் நிதி பாதுகாப்பு மட்டும் வேண்டும்” என்றால் கால திட்டம் போதுமானது. “வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வேண்டும்” என்றால் முழு வாழ்க்கை தேர்வு செய்யலாம். “மருத்துவச் செலவுகளும் கவனிக்கப்பட வேண்டும்” என்றால் மூத்த குடிமக்கள் திட்டம் சிறந்தது.

சரியான திட்டத்னத தேர்வு செய்யும் முன், பல நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகனள கவனமாகப் படித்து, தேவைகளுக்கு ஏற்ப முடிவெடுத்தால், காப்பீடு குடும்பத்திற்கும் மூத்தோருக்கும் ஒரு உறுதியான பாதுகாப்பாக அமையும்.

முடிவுரை

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு என்பது வெறும் பாலிசி அல்ல, அது குடும்பத்திற்கான ஒரு உறுதியான பாதுகாப்பு. வயது அதிகரிக்கும் போது சவால்கள் இருந்தாலும், சரியான திட்டத்தை தேர்வு செய்வது முக்கியமானது.

Acko போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலமாக இன்று தகவல்கனள எளிதில் அறிந்து கொண்டு முடிவவடுக்க முடிகிறது. குடும்பம் நிதி சிக்கல்களில் சிக்காமல் இருக்க மூத்தோர் தங்கள் திறனைப் பொறுத்து காப்பீடு எடுக்க வேண்டும்.

காப்பீடு வைத்திருப்பதால், குடும்பம் பாதுகாப்பாக இருப்பதோடு, மூத்தோரும் மன அமைதியுடன் வாழ முடியும். விலக்கு அறிக்கை: இது ஒரு பொதுவான தகவல் கட்டுரையாகும்.

இதில் வாழ்க்கை காப்பீட்டை குறிப்பிட்டிருந்தாலும், இது எந்தவொரு குறிப்பிட்ட தயாரிப்பையோ அல்லது வழங்குநரையோ (provider) விளம்பரப்படுத்துவதற்கோ அல்லது ஆதரிப்பதற்கோ அல்ல.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US