பொருளாதார தடைகளை நீக்கினால்.. உக்ரைனிலிருந்து உணவை வெளியே அனுப்புவோம்! ரஷ்யா அதிரடி
உலகளவில் உணவு நெருக்கடியை தவிர்க்க, உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக தங்கள் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கருங்கடலில் இருக்கும் அதன் துறைமுகங்களை அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதனால், உக்ரைனிலிருந்து வெளிநாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யவது தடைப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
உலகளவில் தனியாங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் உக்ரைனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, உக்ரைன் அருகிலுள்ள நீர்நிலைகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டால், உக்ரைனில் இருந்து கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கும் மனிதாபிமான வழித்தடங்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் Andrey Rudenko தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உணவுப் பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நேற்று ஐரோப்பிய ஒன்றியம், குற்றம் சாட்டியது.
வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யவிடாமல் உக்ரைன் துறைமுகங்களை ரஷ்யா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், உலகளவில் உணவு விலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.