மெக்காவில் மேல்நோக்கி பாய்ந்த மின்னல்! பிரமிக்கவைக்கும் காட்சி இணையத்தில் வைரல்
சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கடிகார கோபுரத்தில் மின்னல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்ப்பவரை பிரமிக்கவைக்கும் வீடியோவில், மழை பெய்யும் மாலை நேரத்தில் மின்னல் கட்டிடத்தைத் தாக்குகிறது, பின்னர் அந்த மின்னலின் ஒளி வானத்தை அற்புதமான முறையில் ஒளிரச் செய்கிறது.
முல்ஹாம் எச் என்ற பயனரால் ஆன்லைனில் ஒரு கிளிப் பகிரப்பட்டது, அவருடைய ட்விட்டர் பயோ அவரை ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் பல்கலைக்கழகத்தில் வானியல் அறிஞர் என்று கூறுகிறது. அவரது பதிவில் "சில நாட்களுக்கு முன்பு, மெக்காவில் மழையின் போது புர்ஜ் அல்-சாவை மின்னல் தாக்கியது." என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ கிளிப்பை இங்கே பாருங்கள்:
قبل قليل صاعقة تضرب #برج_الساعة مع #أمطار_مكة جعلها الله صيبا نافعا للبلاد والعباد #مكه_الان pic.twitter.com/y9ZziH2dn3
— الفلكي مُلهَم هندي (@MulhamH) August 4, 2022
வீடியோவில், மின்னல் ஒளி தரையில் தொடங்கி பின்னர் மேகத்தை நோக்கி பயணிக்கிறது, இது பாரம்பரிய மின்னல் தாக்குதல்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், பொதுவாக மின்னல் மேலிருந்து கீழே பயணிப்பதை மட்டுமே நாம் பார்த்திருக்கமுடியும். இந்த காட்சி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
வெள்ளிக்கிழமை பகிரப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. பல ட்விட்டர் பயனர்கள் அதை ரீட்வீட் செய்து, அழகான காட்சியைக் கண்டு வியப்படைந்தனர்.
Twitter: @MulhamH
கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அல் அரேபியாவின் கூற்றுப்படி, அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகள் "பல தசாப்தங்களில் அதன் ஈரமான வானிலையை" அனுபவித்து வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, ஜூலை மாதம் சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஈரமான வானிலை நிலவியது. "இந்திய பருவமழை குறைந்ததன்" விளைவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் பெய்த மழையை வல்லுநர்கள் விவரித்துள்ளனர், மேலும் மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளனர்.