இந்தியாவில் தனது பிரம்மாண்ட சிலையை திறந்த மெஸ்ஸி! ஆரவாரம் செய்த ரசிகர்கள் (வீடியோ)
லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் தனது 70 அடி உயர பிரம்மாண்ட சிலையை திறந்து வைத்தார்.
உற்சாக வரவேற்பு
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
Lord #LionelMessi reached Salt Lake
— Ashish Singh (@AshishSinghKiJi) December 13, 2025
Stadium in Kolkata.#MessiInIndia #Messi𓃵 pic.twitter.com/Y34mYgHEav
2011ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தந்த மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் அவரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்று கோஷங்களை எழுப்பினர்.
70 அடி உயர உருவச்சிலை
பின்னர் லேக் டவுன் பகுதியில் நிறுவப்பட்டிருந்த தனது 70 அடி உயர உருவச்சிலையை, மெஸ்ஸி காணொளி மூலம் திறந்த வைத்தார்.
இதனைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி ஐதராபாத்திற்கு செல்ல உள்ளார். அங்கு காட்சி கால்பந்து போட்டியில் விளையாடுகிறார்.
மேலும், மும்பைக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மெஸ்ஸி, 15ஆம் திகதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |