சிறுமிகள் தான் குறி! வீடு புகுந்து அதிர்ச்சியளிக்கும் வகையில் நடந்து கொண்ட 59 வயது முதியவர்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் சிறுமிகளை குறிவைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிளிப்டன் மற்றும் பேசிக் கவுண்டியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்த ஹெர்னாண்டீஸ் கார்சியா (59) என்ற நபர் அங்கிருந்த சிறுமிகளை குறிவைத்து அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் கார்சியாவை கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி கார்சியாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் பத்து ஆண்டுகள் அவர் பரோலில் வெளியில் வரவும் தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் போது கார்சியாவால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் குடும்பத்தாரும் ஜூம் அழைப்பு மூலம் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
