சரணடைய மாட்டோம்... மரியூபோல் நகரில் தில்லாக எதிர்த்து நிற்கும் கொஞ்சம் உக்ரைன் வீரர்கள்
சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் என ரஷ்யா விடுத்த எச்சரிக்கையை கொஞ்சமும் சட்டை செய்யாமல் சரணடையமாட்டோம் என தில்லாக எதிர்த்து நிற்கிறார்கள் மரியூபோல் நகரில் எஞ்சியிருக்கும் உக்ரைன் வீரர்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்குள் சரணடையுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள் என மரியூபோலில் இருக்கும் உக்ரைன் வீர்ரகளுக்குக் கெடு விதித்தது ரஷ்யா. மதியம் 1.00 மணிக்குள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அனைவரும் வெளியேறிவிடவேண்டும் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், கடைசி வரை போராடுவோம் என துணிச்சலாக கூறியுள்ளார்கள் அங்கிருக்கும் உக்ரைன் வீரர்கள்.
விடயம் என்னவென்றால், மரியூபோலில் கொஞ்சம் உக்ரைன் வீரர்கள்தான் எஞ்சியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த கொஞ்சம் வீரர்களும், தாங்கள் சரணடைய மாட்டோம் என்றும், இறுதிவரை போராடப்போகிறோம் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் Odesa பகுதிக்கான உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Oleksiy Goncharenko என்பவர்.