பிரித்தானியாவில் கொரோனாவுடன் வாழும் திட்டம் முன்னெடுப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களையும் அகற்றுவது குறித்த தனது திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் முடிவடையாத நிலையில், கொரோனாவுடம் வாழ்வோம் என்ற புதிய திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வகுத்து வருகிறார்.
இது குறித்து போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் தடுப்பூசி முன்னெடுப்பு வெற்றியடைந்து இருக்கும் நிலையிலும், கொரோனாவால் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை இங்கிலாந்தின் குளிர்கால இறப்புகளின் எண்ணிக்கையோடு ஒத்துப்போக தொடங்கியுள்ளதால் இந்த திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் இங்கிலாந்து வரலாற்றின் மிகக்கடுமையான நாள்களில் இருந்தும், இங்கிலாந்து மக்களுக்கு அவர்களது கட்டுப்பாட்டு சிறையில் இருந்தும் மீண்டும் சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் பழைய இயல்பு நிலையில் மக்கள் தங்கள் வாழ்வை நடத்த தொடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றானது இந்த உலகத்தை விட்டு செல்லாது என்பதால் இந்த திட்டம் வகுக்கப்படுவதாகவும், ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கண்காணிப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏதேனும் புதிய மாறுபாடுகள் கொண்ட வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாட்டுகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.