பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து விலகினார் லிஸ் ட்ரஸ்! அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் 44 நாட்களில் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியேறிய பிறகு, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடஒயே வாக்கெடுப்பி நடத்தி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், பதவியேற்ற 44 நாட்களுக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கு பிறகு இந்திய வம்சாவளி பிரித்தானியரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக்கிற்கும், அவருக்கு இடையில் இருந்த பெரும் போட்டிக்கு இடையே, லிஸ் ட்ரஸ் அதிக வாக்குகளை பெற்று பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆனார்.
அவர் பதவியேற்ற பிறகும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் நிலை மேலும் இக்கட்டான சூழாக்களை நோக்கி நகர்ந்துகொண்டிருகிறது.
அவரது தலைமையில் அறிவிக்கப்பட்ட மினி பட்ஜெட் மற்றும் வரி குறைப்புகள் மற்றும் சலுகைகள் நாட்டின் பொருளாதார நிலைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்திவந்தன.
இதனால், அவர் மீதான நம்பிக்கை குறைந்து வந்த நிலையில், அவருக்கு ஆதரவளித்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களும் பெரும்பாலானோர் அவருக்கு எதிரான திரும்பினார். இப்போது, கட்சி உறுப்பினர்களின் பெரும்பாலானோர் அவரை பதவி விலக வலியுறுத்திய நிலையில், லிஸ் ட்ரஸ் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்துள்ளார்.