கொரோனா ஊரடங்கால் குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்பு பாதிப்பு! ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை
கொரோனா ஊரடங்கால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயம், இளைஞர்கள் வெளிப்புறங்களில் குறைந்த நேரத்தையும் கணிணி அல்லது மொபைல் போன் திரைக்கு முன்னால் நீண்ட நேரத்தையும் செலவிடுவதால், கொரோனா முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு குறுகிய பார்வை கொண்டவர்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கொரோனாவுக்கு முன்பு 6 வயது குழந்தைக்கு குறுகிய பார்வை பாதிப்பு ஏற்பட 17 சதவீதமாக இருந்த வாய்ப்பு, தற்போது 28 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஹாங்காங்கில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல், 7 வயது குழந்தைகளுக்கு 16 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும், 8 வயது குழந்தைகளுக்கு 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
குறுகிய பார்வை அல்லது myopia, பொதுவாக கண்கள் சற்று நீளமாக வளரும்போது ஏற்படும், அதனால் தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தோன்றும்.
குழந்தைகள் வெளியில் விளையாடுவது குறுகிய பார்வை பாதிக்கப்படும் ஆபத்தை குறைக்கிறது என முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022