கொரோனா ஊரடங்கால் குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்பு பாதிப்பு! ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை
கொரோனா ஊரடங்கால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயம், இளைஞர்கள் வெளிப்புறங்களில் குறைந்த நேரத்தையும் கணிணி அல்லது மொபைல் போன் திரைக்கு முன்னால் நீண்ட நேரத்தையும் செலவிடுவதால், கொரோனா முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு குறுகிய பார்வை கொண்டவர்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கொரோனாவுக்கு முன்பு 6 வயது குழந்தைக்கு குறுகிய பார்வை பாதிப்பு ஏற்பட 17 சதவீதமாக இருந்த வாய்ப்பு, தற்போது 28 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஹாங்காங்கில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல், 7 வயது குழந்தைகளுக்கு 16 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும், 8 வயது குழந்தைகளுக்கு 15 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
குறுகிய பார்வை அல்லது myopia, பொதுவாக கண்கள் சற்று நீளமாக வளரும்போது ஏற்படும், அதனால் தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தோன்றும்.
குழந்தைகள் வெளியில் விளையாடுவது குறுகிய பார்வை பாதிக்கப்படும் ஆபத்தை குறைக்கிறது என முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.