திருமணம் முடிந்து தேனிலவு சென்ற லண்டன் பெண்! அங்கு அவர் வாழ்வையே புரட்டிபோட்ட ஒரு தருணம்... பெண்களுக்கு எச்சரிக்கை செய்தி
லண்டனை சேர்ந்த இளம்பெண் திருமணம் முடிந்து கணவருடன் தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த நிலையில் நோயில் இருந்து மீண்டு வருகிறார்.
கிழக்கு லண்டனை சேர்ந்தவர் சார்லோட் டுடுனி டக்கர் (27). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்ற போது அங்கு கேமிரான் என்ற இளைஞருடன் நட்பானார். பின்னர் இது காதலாக மாறியது.
இதையடுத்து கடந்தாண்டு டெக்ஸாஸில் சார்லோட் - கேமிரான் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில் கடந்தாண்டு இறுதியில் நியூ இங்கிலாந்துக்கு புதுமணத்தம்பதி தேனிலவுக்கு சென்றனர். அங்கு குளிக்கும் போது தனது மார்பகத்தில் கட்டி இருப்பதை சார்லோட் கண்டார், இது அவருக்குள் பயத்தை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் அவர் வயிற்றில் தண்ணீர் மூழ்குவதை போல உணர்வு அச்சத்தால் ஏற்பட்டது. எதற்கும் பரிசோதனை செய்து கொள்வோம் என நினைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவுகள் அடுத்த சில நாட்களில் தொலைபேசியில் சார்லோட்டிடம் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஒரு தொலைபேசி அழைப்பு தனது வாழ்வையே புரட்டி போடும் என அப்போது சார்லோட் நினைத்திருக்க மாட்டார். ஏனெனில் அதில் பேசிய மருத்துவர், உங்களுக்கு stage 2 invasive ductal carcinoma மார்பக புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என கூற அதிர்ச்சியில் உறைந்தார் சார்லோட்.
இதை கேட்டு அவர் கணவருடன் மனம் நொறுங்கி போனார்.பின்னர் அவர்கள் லண்டனுக்கு திரும்பிய நிலையில் சார்லோட்டுக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
சார்லோட் கூறுகையில், பிரித்தானியாவின் NHSக்கு நான் கடமைப்பட்டுள்ளேன், ஏனெனில் எனக்கு நல்ல சிகிச்சையளிக்கப்பட்டது. அதே நேரம் கொரோனாவை காரணம் காட்டி அனைத்து சிகிச்சைகளுக்கும் நான் தனியாகவே செல்வது போல ஏற்பாடு செய்தனர்.
என்னுடன் துணைக்கு யாருமே உடன் வரவில்லை. தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். நான் அனைத்து பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான், ஏதாவது உடலில் மாற்றம் மற்றும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே தாமதிக்காமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏனேனில் அவர்கள் கண்டறியப்படாத புற்றுநோயுடனே வாழ வாய்ப்பு உள்ளது, அதனால் பரிசோதனை என்பது முக்கியம் என கூறியுள்ளார்.