லண்டனில் பரிதாபமாக கொல்லப்பட்ட நபர்! கடைசி நிமிடங்களில் சகோதரரின் கையை பிடித்த படி இறந்த சோகம்
பிரித்தானியாவில் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், உயிரிழப்பதற்கு கடைசி நிமிடம் தன்னுடைய சகோதரரின் கையை பிடித்துபடி உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் நேற்றிரவு(15.12.2021), இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, Surbiton சாலை நேற்றிரவு(15.12.2021) முதல் இன்று காலை(16.12.2021) வரை மூடப்பட்டு, பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்த நபர் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவரின் பெயர் Farhad Joseph Khalili(32) என்பதும், Kingston-ல் இவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மேலும் சில தகவல்களை பிரபல ஆங்கில ஊடகமான மைலண்டன் வெளியிட்டுள்ளது. அதில், சம்பவம் நடந்த அன்றைய தினம், Farhad Joseph Khalili-ன் சகோதரர் அங்கே இருந்துள்ளார்.
இது குறித்து குடும்ப உறுப்பினர் Emily Smith என்ற பெண் கூறுகையில், நான் அழுத படி சம்பவ இடத்திற்கு வந்தேன். இப்போது வரை எனக்கு இது அதிர்ச்சியாகவே உள்ளது. என்னால் இதை நம்பவே முடியவில்லை.
அவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது, Farhad Joseph Khalili தன்னுடைய சகோதரரின் கையை பிடித்தபடி கடைசி மூச்சை விட்டு உயிரிழந்தார் என்று வேதனையுடன் கூறினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் இன்னும் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையாக ஒருவரை கைது செய்துள்ளோம். இதனால், இங்கு என்ன நடந்தது என்பதை யாரேனும் பார்த்திருந்தால், அதை பொலிசாருக்கு தெரிவித்தால் குற்றவாளிகளை பிடிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே, இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் ,உடனடியாக 101-ஐ அழைக்கவும் அல்லது @MetCC என டுவிட் செய்து, 6557/15DEC என்ற குறிப்பைக் கொடுக்கவும். அதே சமயம், 0800 555 111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொலிசார் உயர் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இந்த ஆண்டு தொடர்ந்து கத்து குத்து சம்பவங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.