இல்லாத புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை..மருத்துவமனை மீது சட்ட நடவடிக்கை எடுத்த பிரித்தானியர்
பிரித்தானியாவில் ஓய்வுபெற்ற தபால்காரர் ஒருவர், தனக்கு இல்லாத புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஓய்வுபெற்ற தபால்காரர்
மேற்கு லண்டனின் ஐல்வொர்த்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரர் மார்க் வெல்லண்ட் (61).

இவருக்கு 2020யில் புற்றுநோய்க் கட்டி இருப்பதாக புற்றுநோய் நிபுணர்கள் கூறியதால், ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் keyhole அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு, வெல்லன்ட் 3.5 லிற்றர் இரத்தத்தை இழந்தார்.
அதன் காரணமாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முழு மண்ணீரலையும் அகற்றி
அந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் அவரது கணையத்தின் 40 சதவீதத்தையும், முழு மண்ணீரலையும் அகற்றினர்.
ஆனால், அது தனக்கு நீண்டகால வலியையும், உடல்நலக் குறைவையும் ஏற்படுத்தியுள்ளதாக வெல்லண்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்யப்பட்ட சோதனைகளில், மார்க் வெல்லண்டிற்கு புற்றுநோய் இல்லை என்பதும், அந்தக் கட்டி ஒரு தீங்கற்ற முடிச்சு என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், புற்றுநோய் என்று கூறி ஒரு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
மார்க் வெல்லண்ட் அறக்கட்டளையின் அலட்சியத்தின் மீது குற்றம்சாட்டி 400,000 இழப்பீடு கோரியுள்ளார். இந்த வழக்கில் ராயல் மார்ஸ்டன் இன்னும் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |