இதயத்தை துளைத்த கத்தி... லண்டன் பூங்காவில் இளைஞருக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட துயரம்
லண்டன் பூங்காவில் தனியாக அமர்ந்திருந்த இளைஞரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி குற்றுயிராக விட்டுவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Peckham Rye பூங்காவில் சம்பவம்
குறித்த இளைஞர் இதயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை முதன்முறையாக பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
@bpmmedia
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் திகதி வெள்ளிக்கிழமை Peckham Rye பூங்காவிலேயே குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. தனியாக அமர்ந்திருந்த 29 வயது Kalabe Legesse என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை சுமார் 8.24 மணிக்கு வழிபோக்கர்கள் சிலர் அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவிக்குழுவினர், ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவை ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு, அவரை மீட்க முயன்றுள்ளனர்.
@lnp
இதயத்தில் ஏற்பட்ட காயம்
ஆனால், அரை மணி நேரத்திற்கு பின்னர் குறித்த இளைஞர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, உடற்கூராய்வில் இதயத்தில் கூரான ஆயுதத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறந்தார் என்பது உறுதியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது கொடூரமானது மற்றும் அர்த்தமற்றது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தாக்குதல்தாரிகள் இருவர் தொடர்பில் தீவிரமாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவத்திற்கு பின்னர் இருவரும் மிதிவண்டியில் அங்கிருந்து தப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@lnp
அந்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என அதிகாரிகள் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.