லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! தகவல் தெரிவித்தால் 50 லட்சம் சன்மானம்
லண்டனில் இலங்கையர் மரணம் தொடர்பில் கொலையாளி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 20,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் Kankanamalage என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். 50 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்ததாக கூறப்படுகிறது.
ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets Cemetery பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த பயங்கர கொலை சம்பத்தால் LGBT+ சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டதால், இப்போது இது மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவரை கொலை செய்த கொலையாளியை அடையாளம் காணும் யாருக்கும் பொலிசார் கணிசமான தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர்.
இதற்காக 20,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடத்தில் தாக்குதலின் போது, அப்பகுதியில் இருந்த இரண்டு பேர் சிசிடிவியில் பதிவாகியுள்ளனர்.
அவர்களின் புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். துப்பறியும் மேற்பார்வையாளர் Pete Wallis,கொலையின் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, மக்கள் இது குறித்து தகவல் தெரிவிக்க தயங்குவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.
இருந்த போதிலும், இதை அறிந்தவர்கள் பொலிசாரிடமோ அல்லது LGBT+ சமூகத்தினர் யாரிடமாவது நீங்கள் கூறலாம்.
குறிப்பாக நாங்கள் இப்போது வெளியிட்டுள்ள இந்த இரண்டு நபர்கள் பற்றி தெரிந்தால், உடனே தெரிவிக்கும் படியும், பகிரப்படும் எந்த தகவலும் மிகுந்த பத்திரமாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்த முடியும்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் நானும் என்னுடன் இருக்கும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், Met’s LGBT+ ஆலோசனை குழுவைச் சேர்ந்த Derek Lee கூறுகையில், இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் தெரிந்த எவரும் முன்வந்து தகவல் கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இது எல்ஜிபிடி+ மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். உங்களால் உதவ முடிந்தால் உள்ளூர் காவல்துறைக்கு 101-ஐ அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு...https://www.eastlondonadvertiser.co.uk/news/crime/ranjith-roy-kankanamalage-witness-appeal-8296432