லண்டனில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: வேலைநிறுத்த குழப்பம்
பிரித்தானியாவில் RMT தொழிற்சங்கம், 24 மணிநேரப் பணிநிறுத்தங்களை மேற்கொள்வதால் பெரும் குழப்பம் ஏற்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
250 மில்லியன் பவுண்ட்
ரயில், கடல் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT), அதன் உறுப்பினர்களை நாளை மதியம் 12 மணி முதல் 24 மணி நேரத்திற்கும், மீண்டும் வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.

இது லட்சக்கணக்கான பயணிகளுக்குத் துன்பத்தையும், பொருளாதாரத்திற்கு சுமார் 250 மில்லியன் பவுண்ட் இழப்பையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 72,000 பவுண்ட் ஊதியம் பெறும் சுரங்க ரயில் சாரதிகள், மற்றொரு வேலைநிறுத்தத்தின் மூலம் லண்டனை முடக்க தயாராகி வரும் சூழலில் இது தெரிய வருகிறது.
இதற்கிடையில் The Piccadilly மற்றும் Circle வழித்தடங்கள் மூடப்படும் என்றும், Metropolitan, Central வழித்தடங்களின் சில பகுதிகளும் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது.
குறைக்கப்பட்ட சேவை
ஆனாலும், மற்ற அனைத்து வழித்தடங்களிலும் குறைந்தது நான்கு நாட்களுக்குக் குறைக்கப்பட்ட சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கத் தலைவர்கள் நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துவதை எதிர்க்கின்றனர். ஏனெனில், அது சோர்வை அதிகரித்து, பாதுகாப்பை பாதிக்கும் என்று கூறுகின்றனர்.
ஆனால், லண்டனுக்கான போக்குவரத்து (TfL) இந்த மாற்றங்கள் தன்னார்வமானவை என்றும், இந்த வேலைநிறுத்தங்கள் முற்றிலும் தேவையற்றவை என்றும் வலியுறுத்தியுள்ளது.
ரயில் ஓட்டுநர்கள் சங்கமான அஸ்லெஃப் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, ஒரு ஓட்டுநரின் சராசரி வார வேலை நேரம் 36 மணி நேரத்தில் இருந்து 35 மணி நேரமாகக் குறையும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |