லண்டனில் தன்னை விட 7 வயது குறைவான காதலன் இதயத்தில் குத்தி கொன்ற ஆசிரியை! சொன்ன காரணம்
லண்டனில் தன்னை விட 7 வயது குறைவான காதலனை இதயத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த பெண், குற்றவாளி என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கத்தி குத்து
Croydon-ஐ சேர்ந்தவர் சரோலெட் கெர் (36). ஆசிரியையான இவர் கியோவனி வலஸ் (29) என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் திகதி கெர், கியோவனியை மார்ப்பில் கத்தியால் குத்தியிருக்கிறார்.
கத்தியானது இதயத்தில் சரியாக பாய்ந்த நிலையில் கியோவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கெர்-ரை கைது செய்தனர்.
The Metropolitan Police/Reach plc
தண்டனை விபரம்
அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் எங்களுக்குள் சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை கியோவனி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார், அதனால் தற்காப்புக்காக தான் அவரை கத்தியால் குத்தினேன் என்றார்.
பின்னர் கத்தியால் குத்தியது தனக்கு நினைவில் என மாற்றி மாற்றி பேசினார். சாட்சிகள் விசாரணை, தடயவியல் பரிசோதனை தொடர்பான விசாரணை என அனைத்தும் முடிந்த நிலையில் கெர் கொலையாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
The Metropolitan Police