லண்டனில் சாலையில் பெண்மணிக்கு நேர்ந்த சோகம்: இளைஞரை கைது செய்த பொலிஸார்
பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 33 வயது பெண்மணி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
லண்டனில் பெண்ணுக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டனில் கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை 33 வயது பெண்மணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதையடுத்து பெக்ஸ்லியில்(Bexley) உள்ள பென்ஹில் சாலைக்கு(Penhill Road) மாலை 4மணிக்கு முன்னதாக அழைக்கப்பட்ட பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக 27ம் திகதி சனிக்கிழமையான நேற்று சிகிச்சை பலனின்றி 33 வயது பெண்மணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் சிறப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இளைஞர் கைது
இதற்கிடையில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கொலை விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த அடுத்த நாள் பென்ஹில் சாலையைச் சேர்ந்த டோனி க்ராண்ட் (Tony Curant, 33) என்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
Newsquest
ஜனவரி 22ம் திகதி Bexley நீதிமன்றத்தில் அவரை பொலிஸார் ஆஜர்படுத்தினர், இதையடுத்து தொடர் விசாரணைக்காக காவல் வைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |