லண்டனில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்! அச்சுறுத்தல் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் மிகவும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி லண்டன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சமீப காலங்களில் நடக்கும் சம்பவங்களை கருத்தில் கொண்டு, பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்ந்திருப்பதாகவும், இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக லண்டன் மக்கள் விழிப்புடன் இருக்கும் படி வலியுறுத்தப்படுகிறது.
ஏனெனில், சமீபத்தில் Liverpool மற்றும் Essex-ல் நடந்த தாக்குதல்களை தொடர்ந்து, லண்டன் நகர காவல்துறை மற்றும் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பண்டிகை நாட்கள் வருவதால், பரபரப்பான ஷாப்பிங் செய்யும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களில் ரோந்து பணிகள் வரும் வாரங்களில் தொடரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் குண்டுதாரி கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் வைத்து தயாரிப்பதற்கு தேவையான வெடிகுண்டிற்கான உதிர்பாகங்களை வாங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
உள்துறைச் செயலர் Priti Patel, அச்சுறுத்தல் அளவு கடுமையாக' உயர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு மாதத்தில் தலைநகரில் நடந்த இரண்டாவது சம்பவம்(மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், MP கத்தியால் குத்தப்பட்டு கொலை) என்பதால், தாக்குதல் நடக்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், மூத்த பொலிஸ் அதிகாரி Matt Twist இன்று கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, லண்டன் ஓரளவுக்கு அதன் பண்டிகை காலங்களில் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடந்த சில வாரங்களாக Essex மற்றும் Liverpool-ல் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது, பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது.
எனவே, மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். மேலும் வெளியில் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்.