கலிபோர்னியா வணிக வளாகத்தில் 4 பேர் சுடப்பட்ட சம்பவம் எதர்ச்சியானது அல்ல! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் எதிர்ச்சியானது அல்ல என்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கொலையாளிக்கு நன்றாக தெரிந்த நபர்களே என்றும், இது திட்டமிட்ட படுகொலை தாக்குதல் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் உள்ள Orange-ல் வியாழக்கிழமையன்று ஒரு சிறிய வணிக வளாகத்தில் திடீரென ஒரு மர்ம நபர் 9 வயது சிறுவன் உட்பட அங்கிருந்த 4 பேரை சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்.
சம்பத்தில், 44 வயதான Aminadab Gaxiola Gonzalez துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யாட்டார். அவர் பொலிஸாரால் காயமடைந்தாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன அருகிலுள்ள Fullerton பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த Gonzalez, வணிக வளாக கட்டிடத்திற்கு வருவதற்கு வாடகை காரைப் பயன்படுத்தியுள்ளார்.
முழு முகத்தையும் மறைத்தபடி வந்த அவர் வளாகத்தின் முன் மற்றும் பின்புற வாயில்களை சைக்கிள் கேபிள் பூட்டுகளால் பூட்டியுள்ளார்.
ஒரு semi-automatic கைத்துப்பாக்கியை கையில் வைத்திருந்த அவர், தான் மாட்டியிருந்த பையில் பெப்பர் ஸ்ப்ரே, கைவிலங்கு மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தார்.
பின்னர், Unified Homes வணிக அலுவலகத்தை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டார். சம்பவத்தில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மாற்ரிரும் 9 வயது சிறுவன் உயிரிழந்தனர்.
சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடையில் தொழில் மற்றும் தனிப்பட்ட உறவில் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், துல்லியமாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்குள் நடந்த மூன்றாவது பெரிய வெகுஜன துப்பாக்கிச்சூடு ஆகும்.

