எனக்கு பயமா இருக்கு... தயவு செய்து உதவுங்களே! வேறொரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம் பெயர்ந்த சிறுவனின் பரிதாப காட்சி
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிறுவன், செய்வதறியாமல் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் உதவி கேட்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மெக்ஸிகோ-அமெரிக்கா எல்லைக்கு அருகே, அமெரிக்க அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சிறுவன் ஒரு அந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, நான் ஒரு குழுவுடன் வந்தேன்.
ஆனால், அவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவ்வில்லை என ஸ்பானிஷ் மொழியில் கேட்கிறான். இது தொடர்பான வீடியோவை வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
அந்த அதிகாரிக், அவர்களிடம் முகவரி மற்றும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாதா? உன்னை தனியாக விட்டுவிட்டார்களா? என்று கேட்டுள்ளனர்.
அப்போது அந்த சிறுவன், பயணம் செய்த புலம் பெயர்ந்த குழுவில் பெற்றோரால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான் என்பதை அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.
அந்த சிறுவன், அவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள், உங்களிடம் உதவி கேட்க நான் இங்கு வந்துள்ளேன், என்று சிறுவன் ஒரு வித பயத்துடனே அவர்களிடம் கேட்கிறான்.
மேலும், நான் எங்கு செல்லப்போகிறேன் என்பது தெரியவில்லை, என்னை யாராவது கடத்தி சென்றுவிடலாம், எனக்கு பயமாக இருக்கிறது என்று அந்த சிறுவன் அதிகாரிகளிடம் கெஞ்சுவது போன்று குறித்த வீடியோ முடிவடைகிறது.
இந்த சம்பவம் கடந்த 1-ஆம் திகதி அமெரிக்காவின், ரியோ கிராண்டே சிட்டிக்கு கிழக்கே நடந்ததாக கூறப்படுகிறது. குறித்த சிறுவன், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இரவு முழுவதும் மலையேற்ற பகுதியான ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு பகுதியிலே கழித்துள்ளான்.
அமெரிக்கா எல்லை மற்றும் ரோந்து பணியின் துறைத் தலைவர் குளோரியா சாவேஸ் கூறுகையில், ஒவ்வொரு முறையும் ஆபத்தான மெக்ஸிகோ-அமெரிக்காவின் எல்லையைத் தாண்டி தனியாக அனுப்பப்படும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வைப் பற்றி பெற்றோர் சிந்திக்க வேண்டும்.
ஆதரவற்ற தங்கள் குழந்தைகளை எல்லைக்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வரும் அனைத்து பெற்றோர்களுக்கும், தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள், ஏனெனில் குழந்தைகளை அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் யு.எஸ். சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு மூலம் 170,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
இதனால் இந்த குடியேற்ற நெருக்கடிக்கு, ஒரு தீர்வை கண்டுபிடிக்க, பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அதிகாரிகளிடம் வந்து உதவி கேட்ட சிறுவன் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவன்? என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.


