பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி

Crime England
By Arbin Mar 19, 2025 06:13 PM GMT
Report

பிரித்தானியாவில் பாடசாலை ஒன்றில் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டமிட்ட இளைஞர் ஒருவர் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூவரை துப்பாக்கியால் கொலை செய்த சம்பவத்தில் தண்டனைப் பெற்றுள்ளார்.

குடியிருப்பில் வைத்து படுகொலை

குறைந்தபட்சம் 49 ஆண்டுகள் அந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் ப்ராஸ்பர் என்ற அந்த 19 வயது இளைஞர் தமது தாயாரான 48 வயது ஜூலியானா பால்கன், சகோதரர் 16 வயது கைல், 13 வயதேயான சகோதரி கிசெல்லே ஆகியோரை கடந்த ஆண்டு செப்டம்பர் 13 ம் திகதி லூட்டனில் உள்ள அவர்களின் குடியிருப்பில் வைத்து படுகொலை செய்துள்ளார்.

பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி | Luton Killer Jailed For Minimum 49 Years

கொலைகள் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது முன்னாள் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் வழியில் ப்ராஸ்பர் கைது செய்யப்பட்டான். அங்கு அவர் இளம் சிறார்கள் மற்றும் ஆசிரியர்களை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது.

லூட்டன் கிரவுன் நீதிமன்றத்தில், நீதிபதி சீமா-க்ரப் ப்ராஸ்பரிடம் தெரிவிக்கையில், உங்கள் லட்சியம் புகழைப் பெறுவதாகும், மரணத்திற்கு பிறகும், 21 ஆம் நூற்றாண்டின் உலகிலேயே மிகவும் கொடூரமான பாடசாலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அறியப்பட விரும்பினீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார்

லண்டனில் கோர சம்பவம்... மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: குவிக்கப்பட்ட பொலிசார்

அந்த கொடூரத் திட்டத்தை முன்னெடுக்க, நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளீர்கள் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ப்ராஸ்பரின் திட்டம் நிறைவேறியிருந்தால் மொத்தமாக 34 பேர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

விடுவிக்கப்படாமல் போகலாம்

அவரது குடும்பம், அதைத் தொடர்ந்து அவரது பழைய பள்ளியில் நான்கு வயது நிரம்பிய சிறார்கள், இரண்டு ஆசிரியர்கள், பின்னர், இறுதியாக, அவர். தாயார் உட்பட குடும்பத்தினரை கொலை செய்த பிறகு ப்ராஸ்பர் எழுதிய குறிப்பில்,

பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி | Luton Killer Jailed For Minimum 49 Years

நான் அவர்களைத் தூக்கத்தில் கொன்றிருந்தால் யாரும் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க மாட்டார்கள் என்று நான் கணித்தது சரிதான் என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி குறிப்பிடுகையில், சமூகத்திற்கு மிக ஆபத்தான நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், ஒருவேளை நீங்கள் ஒருபோதும் விடுவிக்கப்படாமல் போகலாம் என தெரிவித்துள்ளார்.

கொலை சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவரது குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தபோது, ​​சுட்டுக் கொல்லப்பட்ட அவரது குடும்பத்தினரின் உடல்களைக் கண்டனர். அவரது சகோதரருக்கு 100க்கும் மேற்பட்ட கத்திக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

பிரித்தானியாவின் கொடூர இளைஞருக்கு அளிக்கப்பட்ட தண்டனை: முழுமையான பின்னணி | Luton Killer Jailed For Minimum 49 Years

இந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்பட்டது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலம் கழிக்கப்பட்டதை அடுத்து, அவர் 48 ஆண்டுகள் 177 நாட்கள் சிறையில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US