தடை விதித்த நீதிபதி... மீறுபவர்களுக்கு இது தான் கதி! பிரித்தானியா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் M25 நெடுஞ்சாலை போராட்டகாரர்களுக்கு எதிராக நீதிபதி தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
Insulate Britain என்ற சுற்றுச்சூழல் குழுவினர் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரே வாரத்தில் ஐந்து முறை M25 நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று M25 நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவது ஆபத்தானது மற்றும் எதிர்மறையானது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால், இதுபோன்ற நடத்தையால் எதையும் சாதிக்க முடியாது, இது ஓட்டுநர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் மாசுபாட்டை அதிகரிக்கிறது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரிசெய்ய காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னரும் Insulate Britain சுற்றுச்சூழல் குழுவினர் M25 நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளதாவது, நெடுஞ்சாலையை மறிப்பது பொறுப்பற்றது மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
M25 போராட்டகாரர்களுக்கு எதிராக தடை உத்தரவு பெற நான் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் கோரியிருந்தேன், நேற்றிரவு M25 போராட்டகாரர்களுக்கு எதிராக நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Invading a motorway is reckless & puts lives at risk. I asked National Highways to seek an injunction against M25 protestors which a judge granted last night. Effective later today, activists will face contempt of court with possible imprisonment if they flout.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) September 22, 2021
இந்த தடை உத்தரவு இன்று பிற்பகல் அமுலுக்கு வருகிறது, தடை உத்தரவை மீறும் ஆர்வலர்கள் சிறைத்தண்டனையுடன் நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள் நேரிம் என கிராண்ட் ஷாப்ஸ் எச்சரித்துள்ளார்.