பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம்
Family was on the way to airport before fatal crash: குடும்பம் ஒன்று திருமணத்திற்காக விமான நிலையம் செல்லும் வழியில் கோர விபத்தில் சிக்கியது.
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள திருமணம் ஒன்றிற்காக, மூன்று சகோதரிகளும் ஏழு வயது சிறுவன் ஒருவரும் டப்ளின் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த நிலையில் கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
பயங்கர விபத்து
BMW கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் அவர்கள் நால்வரும் பலத்த காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை கில்டேர் கவுண்டியில் உள்ள M9 சாலையில் ஹூண்டாய் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் அந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்தது;

இதில் 30 வயது கடந்த அல்மா மற்றும் நியாஃப் கின்செல்லா, 20 வயது கடந்த அவர்களது இளைய சகோதரி எல்லா ஹென்ட்ரிக்கன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளனர்.
அதிகாலை 3 மணிக்குச் சற்றுப் பின்னர், அவர்களுடைய வாகனம், வடக்கு நோக்கிய சாலையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த, திருடப்பட்டதாகக் கூறப்படும் அதிக சக்தி வாய்ந்த BMW காருடன் நேருக்கு நேர் மோதியது.
BMW காரில் பயணம் செய்த 15 முதல் 17 வயதுக்குட்பட்டதாகக் கூறப்படும் ஐந்து சிறுவர்களும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளனர். இன்று சமூக ஊடகங்களில் காமில் புஸ்ட்கோவ்ஸ்கி, ஜோ கார்தி, ஜெரமி ஓ'பிரையன், அலெக்ஸ் மெக்கார்த்தி மற்றும் ஜாக் கென்னடி என அடையாளம் காணப்பட்டனர்.
ஹூண்டாய் காரில் பயணித்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர். அல்மா மற்றும் நியாம் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அதேவேளையில் அவர்களது இளைய சகோதரி மற்றும் மருமகன் ஆகியோர் பலத்த காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கார் கொள்ளை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் தென்கிழக்கு அயர்லாந்தின் கார்லோ (Carlow) பகுதியைச் சேர்ந்தவர்கள்; பிரித்தானியாவில் நடைபெறவுள்ள திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், டப்ளினில் 'லக்கி டிப்' (Lucky Dip) கொள்ளை மற்றும் கார் திருட்டு குழுவைச் சேர்ந்தவர்களா அந்தச் சிறுவர்கள் என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதே பகுதியில் இரவு முழுவதும் நடைபெற்ற பல கார் கொள்ளை முயற்சிகளிலும் இவர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
காவலர்கள் அந்தப் பயங்கரமான விபத்துப் பகுதிக்கு வந்து சேர்ந்தபோது, மரணமடைந்த ஐவருமே முகமூடி அணிந்த நிலையில் காணப்பட்டனர்.
இதனிடையே, விபத்தைத் தொடர்ந்து தகவல் வெளியானதும், மரணமடைந்த ஐவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர்களும் குடும்பத்தினரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |