மடகாஸ்கர் அதிபரை படுகொலை செய்ய முயற்சி.. பிரெஞ்சுக்காரர்கள் உட்பட பல வெளிநாட்டினர் கைது!
மடகாஸ்கர் அதிபர் படுகொலை முயற்சி தொடர்பாக இரண்டு பிரரெஞ்சுக்காரர்கள் உட்பட பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியுள்ளார் என்று நாட்டின் prosecution அலுவலகத்தை மேற்கோளிட்டு AFP தெரிவித்துள்ளது.
அதிபர் படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பல வெளிநாட்டினர் மற்றும் மடகாஸ்கரில் வசிப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு பிரெஞ்சு நாட்டவர்களும் அடங்குவர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் Franco-Malagasy நபரான Paul Rafanoharana மற்றும் பிரெஞ்சுக்காரரான Philippe Francois என்று RFI வானொலி தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை Rafanoharana அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் Philippe Francois பிரான்சுக்கு புறப்படவிருந்தபோது இவாடோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.