திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை

Tamil Nadu Police Madurai Tirupparankunram Murugan Temple
By Karthikraja Dec 04, 2025 01:36 PM GMT
Report

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்ததோடு, இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்ற தீபம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

இந்த மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

வழக்கமாக கார்த்திகை தீப திருவிழாவின் போது, அங்குள்ள பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து அமைப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் 6;05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உத்தரவிட்டார். 

இதனையடுத்து, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோவில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.  

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

நேற்று வழக்கமாக தீபம் ஏற்றப்படும் பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

இதனை கண்டித்து, இந்து அமைப்பினர் பெருமளவில் கோவில் முன்பு திரண்டனர். மேலும், காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டை தூக்கி எறிந்து விட்டு, மலை மீது எற முயற்சித்தனர். 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

144 தடை உத்தரவு

இதில் காவல்துறை மற்றும் இந்து அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான ராம ரவிக்குமார், நீதிமன்றம் அனுமதியளித்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தன்னுடன் மனுதாரர் தீபம் ஏற்ற தன்னுடன் 10 பேரை அழைத்துச் செல்லலாம், சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்புடன் சென்ற ராம ரவிக்குமார் நீதிமன்ற உத்தரவை காட்டியும் காவல்துறை அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வருவதால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தையடுத்து மனுதாரர் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றே தீபம் ஏற்ற உத்தரவு

இதனையடுத்து, இன்று மதியம் விசாரணைக்கு வந்த மேல்முறையீடு மனுவை உள்நோக்கம் கொண்டதாக கருதி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், "மனுதாரர் இன்று திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இன்றே தீபம் ஏற்ற உரிய பாதுகாப்பு தராவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.   

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram   

உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை அடுத்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் வருகை தந்துள்ளார். முன்னதாக அவர் வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, கோவில் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்து அமைப்பினர் ஏரளாமானோர் அங்கு கூடியுள்ள நிலையில், 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும், கலைந்து செல்லுங்கள், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்வும் எனவும் கூடியுள்ளவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ; இன்றே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - கைதுக்கு தயாராகும் காவல்துறை | Madurai Hc Ordered To Deepam In Tirupparankunram

இந்து அமைப்பினர், காவல்துறையினரிடையே வாக்குவாதம் செய்து வரும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US