20 வருடங்கள் நீடித்த காதல்... பின்னர் ரகசிய திருமணம்: மதுரோ - சிலியா அரசியல் கதை
நிக்கோலஸ் மதுரோவும் சிலியா ஃப்ளோரஸ்ஸும் நீண்ட 20 வருடங்களாக காதலித்து வந்தாலும் தங்கள் புரட்சிகர இலட்சியங்களில் கவனம் செலுத்தியதால், திருமணம் செய்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
எதிர்பாராத திருமணம்
வெனிசுலா சோசலிச அரசின் இடதுசாரி உயரடுக்கு வர்க்கத்தைச் சேர்ந்த பலர், திருமணத்தை ஒரு முதலாளித்துவ கவனச்சிதறலாகவே கருதுகின்றனர்.

இந்த நிலையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்தப் பிறகு, தானும் ஃபுளோரஸும் ஒரு சிறிய குடும்ப நிகழ்வில் ரகசியமாகத் தங்களின் திருமணத்தை முறைப்படுத்திக்கொண்டதாக மதுரோ 2013-ல் அறிவித்தபோது, அது ஒரு ஆச்சரியமாக அமைந்தது.
அந்தத் திருமணமானது, ஃப்ளோரஸுக்கு வெறும் மனைவி என்ற அந்தஸ்தை வழங்குவதை விட மிகவும் உயர்ந்த ஒரு பதவியை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்ட மற்றொரு கணக்கிடப்பட்ட அரசியல் நகர்வாகும்.
மதூரோ ஆட்சிக்குத் தெரிவு செய்யப்பட்ட சிக மாதங்களிலேயே இந்த எதிர்பாராத திருமணம் நடந்தது, இதன் மூலம் ஃபுளோரஸ் வெனிசுலாவின் முதல் பெண்மணி அல்லது முதல் போராளி என்ற நிலைக்கு அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டார்.
முதல் போராளி என்ற அந்த விளக்கம் பொருத்தமானதாகவே இருந்தது, ஏனெனில் ஃஃபுளோரஸ் தனது புதிய பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது அதிகாரத்தை ஆக்ரோஷமாக நிலைநாட்டினார்.
அவர் வெனிசுலா அரசாங்கத்தின் பொது நிர்வாகம் முழுவதும் தனது உறவினர்கள் 40 பேரை நியமித்தார். மதுரோ உடனான திருமணத்திற்கு முன்பே, வெனிசுலாவின் முன்னாள் சர்வாதிகாரி ஹ்யூகோ சாவேஸின் கீழ் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றியபோது ஏற்பட்ட தொடர்புகளை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

இரக்கமற்ற அரசியல் செயற்பாட்டாளர்
ஒரு முன்னாள் அரசாங்க ஆராய்ச்சியாளர் அவரை, ரகசியமான, சூழ்ச்சிக்கார மற்றும் இரக்கமற்ற அரசியல் செயற்பாட்டாளர் என்றும், 'அனைத்து அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களிலும் மதுரோவின் தலைமை ஆலோசகர் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் அவர்களின் அனைத்து திட்டமிடல்களும் சனிக்கிழமை அவர்கள் இருந்த சூழ்நிலைக்கு அவர்களை தயார்படுத்தியிருக்க முடியாது என்றே கூறுகின்றனர். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது படுக்கையறைகளிலிருந்து பிடிக்கப்பட்டு, போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிலியா ஒருபோதும் வெனிசுலாவின் முதல் பெண்மணியாக செயல்பட மாட்டார், ஏனென்றால் அது உயர்மட்ட சமூகத்தின் ஒரு கருத்து என்றே மதுரோ அவர்களின் ரகசியத் திருமணத்தின் போது கூறினார்.
மாறாக, புரட்சிகர நம்பகத்தன்மைக்காக மதிக்கப்படும் ஒரு அரசியல் பங்காளியாக அவரை முன்வைத்தார். அந்தத் திருமணம் ஃபுளோரஸை சர்வதேச அரங்கிற்குள் கொண்டு சென்றது, மேலும் மதுரோவை பலவீனப்படுத்தும் முயற்சியாக 2018-ல் அமெரிக்கத் தடைகளால் அவர் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டார்.
இருப்பினும், பல ஆண்டுகளாக, ஃபுளோரஸ் தனது சொந்தப் போராட்டங்களில் தானே போராடக்கூடியவர் என்பதை நிரூபித்துள்ளார், மேலும் அவர் தனது கணவரைச் சந்திப்பதற்கு முன்பே வெனிசுலாவின் சோசலிச வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

1990களில், தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது, அப்போதைய லெப்டினன்ட் கர்னல் ஹ்யூகோ சாவேஸின் அட்டர்னி ஜெனரலாக ஃபுளோரஸ் பணியாற்றினார்.
குடியரசின் அட்டர்னி ஜெனரல்
1998-க்குப் பிறகு சாவேஸ் அதிகாரத்திற்கு வந்தபோது, ஃபுளோரஸ் 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் தேசிய சட்டமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார், இது அவரது அரசியல் இயக்கத்தில் அவரது பங்கை உறுதிப்படுத்தியது.
அவரது வளர்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்தது, மேலும் 2006 ஆம் ஆண்டில், அவர் வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆனார்.

2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சாவேஸ் ஃபுளோரஸை தனது ஆட்சியில் ஒரு உயர்மட்டப் பதவிக்கு உயர்த்தினார் - அதாவது குடியரசின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு.
மார்ச் 2013-ல் அவர் இறக்கும் வரை ஃபுளோரஸ் அந்தப் பதவியில் நீடித்தார். அதே ஆண்டின் தொடக்கத்தில் தான் மதுரோ ஜனாதிபதி பதவியை ஏற்றார், மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஃபுளோரஸ் வெனிசுலாவின் அதிகாரப்பூர்வ 'முதல் போராளி' ஆனார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |