அமெரிக்காவுக்கு சென்றிருந்த மகாராணியார்: கருப்பினப்பெண் செய்த விதிமீறலால் அதிர்ந்த உலகம்
அரசு மக்களுக்கு வீடுகள் வழங்கும் ஒரு திட்டத்தைப் பார்ப்பதற்காக, Alice Frazier என்னும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார் பிரித்தானிய மகாராணியார்.
ஆனால், அந்த கருப்பினப் பெண் செய்த செயலைக் கண்டு உலகமே ஒரு கணம் அதிர்ந்தது...
1991ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணியார் வாஷிங்டன் DCக்கு சென்றிருந்தார்.
அரசு மக்களுக்கு வீடுகள் வழங்கும் ஒரு திட்டத்தைப் பார்ப்பதற்காக, Alice Frazier என்னும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருந்தார் மகாராணியார்.
ஆனால், அவர் வீட்டுக்குள் சென்றதும் அந்தக் கருப்பினப் பெண் செய்த செயலால் அந்த விடயத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமே அதிர்ந்தது.
ஆம், மரபுகளை மீறி, மகாராணியாரை சட்டென கட்டிப்படித்தார் அந்தப் பெண். மகாராணியாரோ அதிர்ச்சியடையவில்லை, அதை என்ஜாய் பண்ணினார் என்பதை அவரது முகமே காட்டியது.
மகாராணியாரின் மறைவையொட்டி அந்த விடயத்தை நினைவுகூரும் Aliceஇன் மகளான Betty Queen, மகாராணியாரை என் தாய் கட்டியணைத்ததும் எல்லாரும் திகைத்துப்போனார்கள் என்கிறார். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் அதுதான் தலைப்புச் செய்தி!
அந்த சம்பவத்தின்போது கூட இருந்த முன்னாள் வாஷிங்டன் DC மேயரான Sharon Pratt என்பவரோ, அதைப் பார்த்து எல்லாரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிடுவார்கள் என்று நினைத்தேன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் உட்பட எல்லோருமே நன்கறிவார்கள், மகாராணியார் கை கொடுத்தால்தான் பதிலுக்கு கைகொடுக்கவேண்டும், பொது இடத்தில் அவருக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அதைக் குறித்து யாரும் Aliceக்குச் சொல்லவில்லை...
ஆக, அவர் மகாராணியார் வீட்டுக்குள் வந்ததும் அவரைக் கட்டியணைத்தார், இரவெல்லாம் நான் தூங்கவில்லை, உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன், உங்களுக்காக சிக்கன், முட்டை மற்றும் உருளைகிழங்கு உணவு தயாரித்திருக்கிறேன் என்றார் மகாராணியாரிடம். மொத்தத்தில் அத்தனை மரபுகளையும் மீறிவிட்டார் என்கிறார் Sharon சிரித்துக்கொண்டே.
ஆனால், மகாராணியார் முகம் சுழிக்கவில்லை. அவரும் சிரித்துக்கொண்டே Aliceன் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். Aliceஇன் மனம் அவருக்கு புரிந்திருந்தது.
பின்னர் மகாராணியார் நாடு திரும்பியதும், அந்த பகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு மகாராணியார் தெரு என்று பெயர் வைக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றுவிட்டது அந்த சம்பவம்.