இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று இணையும் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே! உற்சாகத்தில் ரசிகர்கள்
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் அதிகாரபூர்வமாக இணையவுள்ளார்.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. நடப்பு தொடரில் பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி தவறவிட்டுள்ளது.
இதையடுத்து எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே அவர் இலங்கை அணியுடன் இணையவுள்ளார், ஏனெனில் இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயவர்தனே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக அக்டோபர் 16 முதல் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேலா ஜெயவர்தனே இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஜெயவர்தனேவின் ஆலோசனைகளை பெறுவார்கள்.
பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஜெயவர்தனேவின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு அமைந்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.