இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி தூக்கிய இலங்கை அணி! வெற்றி குறித்து ஜாம்பவான் ஜெயவர்தனே சொன்ன வார்த்தைகள்
இந்தியாவுடனான டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கைக்கு அணியை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே பாராட்டியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது.
இதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி ஒருநாள் தொடர் தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது.
இலங்கை அணியின் சிறப்பான வெற்றி குறித்து மஹேலா ஜெயவர்தனே டுவிட்டரில், நம்பிக்கையை அதிகரிக்கும் வெற்றி இலங்கை அணிக்கு. இன்னும் அதிகமான உழைப்பு தேவைப்படுகிறது.
ஆனால் அணியினரின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது.
அதே போல ஷிகர் தவான் தலைமையிலான அவரின் இந்திய அணிக்கும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.