Omicron பரவலுக்கு கனடாவை குற்றஞ்சாட்டும் சீனா: வெளிவரும் பின்னணி
சீனா தலைநகர் பீஜிங்கில் ஒருவருக்கு Omicron பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் தரப்பு கனடாவை குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இருந்து பீஜிங் நகருக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் காரணமாகவே Omicron பரவல் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ள கனடா நிர்வாகம், இது நம்பகத்தன்மையற்ற குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேச அஞ்சல் மூலம் கொரோனா பரவுவது என்பது சாத்தியமற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளனர்.
பீஜிங் நகரில் 26 வயது பெண் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், குறித்த பெண் பீஜிங் நகரத்தை விட்டு வெளியே சென்றதாகவோ, அல்லது கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் பழகவோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் ஜனவரி 7ம் திகதி கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட அஞ்சல் ஒன்று அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த அஞ்சல் மூலம் ஓமிக்ரான் அவருக்கு பரவியிருக்கலாம் என சீனா அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.