பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு! 2 பேர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜோஹார் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே திடீரென்று இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளளது.
குறிந்த வெடிகுண்டு சம்பத்தினால் அந்த சென்று கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவமறிந்து விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயமடைந்தனர் என கூறப்படுகின்றது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.