சீனாவில் நடந்த பாரிய விபத்து! இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலர் பலி
சீனாவில் நடந்த சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிய சாலை விபத்து
ஜியாங்சி மாகாணத்தில் அதிகாலை 1 மணியளவில் பாரிய சாலை விபத்து நடந்தது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 19 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்தாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிரக் மோதிய இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
@AFP
வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
விபத்து குறித்து அறிந்த போக்குவரத்து பொலிஸார், மூடுபனி வானிலை நிலவுவதால் கவனாமாக வாகனத்தை இயக்குமாறு ஓட்டுனர்களுக்கு பயணக் குறிப்புகளை வழங்கினர்.
மேலும், பனி காரணமாக வாகனத்தை இயக்குவது கடினமாக உள்ளதால், இது போக்குவரத்து விபத்துகளை எளிதில் ஏற்படுத்தும் என்றும் கூறினர். அத்துடன் வாகன ஓட்டிகள் பாதைகளை மாற்றி முந்தி செல்ல வேண்டாம் எனவும், முன்னால் உள்ள வாகனத்தில் இருந்து பாதுகாப்பான் தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதற்கிடையில் விபத்துக்கான காரணம் குறித்து ஆழமான விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
@AP Archive