மலாவி துணை ஜனாதிபதி விமான விபத்தில் மரணம்
ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா (Saulos Chilima) விமான விபத்தில் உயிரிழந்தார்.
மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) இதனை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
24 மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, துணை ஜனாதிபதியின் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விமானத்தில் 9 பேர் இருந்தனர். அவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
மலாவியின் துணை ஜனாதிபதியின் விமானம் ஜூன் 10 திங்கட்கிழமை காலை ரேடாரில் இருந்து காணாமல் போனது.
செய்தி நிறுவனமான Reuters-ன் கூற்றுப்படி, விமானப் போக்குவரத்து ஆணையம் பல முறை விமானத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும், அது பலனளிக்கவில்லை.
சிலிமாவின் விமானம் திங்கள்கிழமை மதியம் இந்திய நேரப்படி மதியம் 2:47 மணிக்கு மலாவியின் தலைநகர் லிலாங்வேயில் இருந்து புறப்பட்டது.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு Mjuju நகர விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் லிலாங்வேக்கு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விமானம் காணாமல் போனது.
விமானத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, பிரித்தானியா, நார்வே மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உதவியையும் மலாவி நாடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Lazarus Chakwera, Malawi's Vice President Saulos Chilima, Malawian Vice President Saulos Chilima plane crash