சிங்கப்பூரில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள இலங்கை தமிழர்
சிங்கப்பூரில் அதிபராக இருந்த 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் பதவி காலம் முடிவடைந்து நேற்றுடன் அவர் விடைபெற்றார். இந்நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
தர்மன் சண்முகரத்னம்
சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 வீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.
இதனையடுத்து, சிங்கப்பூரின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இன்று பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை தர்மன் சண்முகரத்னம் கடந்த காலங்களில் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |