மலேசியாவில் மர்ம தோல் நோயால் பாதிக்கப்படும் சுறாக்கள்! காரணம் என்ன?
மலேசியாவில் உள்ள ரீஃப் இன சுறாக்கள் மர்ம தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு கடல் வெப்பம் அதிகரிப்பது தான் மிக முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறகின்றனர்.
சிபாடன் கடற்பகுதியில் வாழும் ரீஃப் இன (Whitetip Reef Shark) சுறாக்களின் தலையில் புள்ளி புள்ளியாக புண்கள் ஏற்பட்டிருப்பது ஆழ்க்கடல் நீச்சல் வீரர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சிபாடன் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி என்பதால் அங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மனிதர்களால் சுறாக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால், சிபாடனில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதுவே சுறாக்கள் தோலில் இருக்கும் புண்களுக்கு முக்கிய அகாரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, இப்பகுதியில் 1985-ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பம் பதிவாகிய இருந்தது. ஆனால், அந்த வெப்பநிலையிவிட இந்த ஆண்டு 1 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது.