மலேசியாவில் பரவியது ஒமைக்ரான்!
மலேசியாவில் முதன் முதலாக மாணவர் ஒருவரக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு மாணவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது வியாழனன்று அடையாளம் காணப்பட்டது.
ஒமைக்ரான் தோன்றியதை குறித்து உலக சுகாதார அமைப்பிடம் ஆப்பிரிக்க நாடு தகவல் தெரிவிக்கும் முன், பாதிக்கப்பட்ட மாணவர் மலேசியாவிற்கு வந்ததாக Khairy தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பேராக் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர், முழுயைாக தடுப்பூசி போட்டவர் மற்றும் அறிகுறி எதையும் காட்டவில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சரின் ஆலோசகர் Dimishtra Sittampalam தகவல் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் ஏற்கனவே நாட்டில் பரவியுள்ளது, மாணவர் குறித்து கிடைத்துள்ள தரவுகளின் படி உள்ளூர் பரவல் ஏற்படவில்லை என்று காட்டுகிறது என சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான டாக்டர். மகேஷ் அப்பண்ணன் கூறியுள்ளார்.