ஹமாஸ் படைகளை தொடர்ந்து ஆதரிப்போம்... வெளிப்படையாக அறிவித்த ஆசிய நாடு
ஹமாஸ் படைகளை தொடர்ந்து ஆதரிப்போம் என வெளிப்படையாக அறிவித்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஒருபோதும் அந்த குழுவினரை தண்டிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
புறக்கணித்து, பொருளாதார தடைகள்
பாலஸ்தீன விவகாரத்தை மலேசியா ஒருமனதாக மீண்டும் ஆதரிக்க வேண்டும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
@reuters
ஹமாஸ் படைகளை ஆதரிக்கும் நாடுகளை புறக்கணித்து, பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே மலேசிய பிரதமர் இதை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கவே, அமெரிக்காவின் அச்சுறுத்தலை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் அன்வர் இப்ராஹிம்,
இரு நாடுகள் தீர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாகிய நாம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும் எனவும் பதிலளித்துள்ளார்.
@reuters
இஸ்லாமிய மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடான மலேசியா, பாலஸ்தீனத்துக்காக நீண்ட காலமாக வாதாடி வருகிறது. மட்டுமின்றி, மலேசியா இதுவரை இஸ்ரேலை தூதரக ரீதியாக அங்கீகரிக்கவில்லை என்பதுடன், இரு நாடுகள் தீர்வு எட்டும் வரையில் அத்தகைய அங்கீகாரம் வழங்கப்படாது என்றும் முடிவெடுத்துள்ளது.
76 வயதான அன்வர் இப்ராஹிம் தமது பல்கலைக்கழக நாட்களில் இருந்தே பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளார். இதனாலையே, அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் தந்தும் அதை அவர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |