மலேசியாவில் வேனுக்குள் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுமியை விட்டு மறந்து வீட்டுக்கு சென்ற ஓட்டுனர்! சில மணி நேரத்தில் இறந்த சோகம்
மலேசியாவில் 8 வயது சிறுமி வேனுக்குள் இருப்பதை மறந்து வீட்டுக்கு ஓட்டுனர் சென்ற நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி வேன் ஒன்றில் ஏற்றபட்ட நிலையில் வேன் கிளம்பி சென்றது. இதையடுத்து சிறுமியை காப்பகத்தில் கொண்டு விட வேண்டும் என்பதை மறந்த ஓட்டுனர் அவரை வேனுக்குள்ளேயே விட்டு மறந்து போய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து மதியம் 2.30 மணியில் இருந்து 5.30 மணி வரை வேனுக்குள் இருந்த சிறுமி சுயநினைவை இழந்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் இறப்புக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அஜாக்கிரதையாக இருந்த வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.