இந்தியாவுக்கு அடுத்த நெருக்கடி... திகதி குறித்த மாலத்தீவின் புதிய ஜனாதிபதி
மாலத்தீவின் புதிய ஜனாதிபதி தற்போது எடுத்துள்ள முடிவால் இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
படைகளை திரும்பப் பெற வேண்டும்
எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதிக்குள் இந்தியா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
Credit: defenceconnect
மாலத்தீவின் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உறுதிமொழியின் பேரில் ஜனாதிபதி முகமது முய்ஸு கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.
தொடர்புடைய பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் பல காலமாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா மாலத்தீவுக்கு வழங்கிய ராணுவ உபகரணங்களுக்கு உதவும் பொருட்டு அந்த நாட்டில் சுமார் 80 இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய குழு நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இதே ராணுவ குழுவானது மனிதாபிமான அடிப்படையில் உதவிகளும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி முய்ஸு முன்மொழிந்தார்.
இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக
தொடர்ந்து மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர், 80 பேர்கள் கொண்ட குழு வெளியேறவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தியாவின் பெரும் செல்வாக்கு மாலத்தீவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூறி, இந்தியப் படைகளை அகற்றுவதாக உறுதியளித்தார்.
@reuters
அதுவே மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் கூறப்பட்டது. இதனிடையே, கடந்த வாரம் சீனாவுக்கு தனது முதல் அரசுமுறை பயணத்தின் போது ஜனாதிபதி முய்ஸு சீனாவும் மாலத்தீவுக்கும் இடையிலான தங்கள் உறவை மேம்படுத்திக்கொண்டார்.
அத்துடன் மாலத்தீவில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள சீனா உறுதியளித்துள்ளது. மேலும், ஏற்கனவே 1.37 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை அளவுக்கு மாலத்தீவு சீனாவிடம் கடனாளியாக உள்ளது. இது மாலத்தீவின் பொதுக் கடனில் சுமார் 20 சதவிகிதத்திற்கு சமம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |