தயவு செய்து மாலத்தீவுக்கு வாருங்கள்: இந்தியர்களுக்கு மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுற்றுலா மூலம் தங்கள் நாட்டுக்கு வரும் வருவாய் குறைந்துள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர்.
இந்திய பிரதமரை அவமதித்த மாலத்தீவு அதிகாரிகள்
ஜனவரி மாதத்தின் துவக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, மாலத்தீவை சேர்ந்த துணை அமைச்சர்கள் மூன்று பேர் அவரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களால், இருநாட்டு உறவில் விரிசல் உண்டானது.
அதைத் தொடர்ந்து மாலத்தீவை புறக்கணிக்குமாறு இந்திய பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்க, லட்சத்தீவு கவனம் ஈர்க்கத்துவங்கிய அதே நேரத்தில், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.
நேற்று வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகளிலிருந்து, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 42 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மே 4 நிலவரப்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 73,785 இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 43,991ஆக குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சரின் கோரிக்கை
இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சரான இப்ராஹிம் ஃபைசல், மாலத்தீவுக்கு வருமாறும், தங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆதரவு தருமாறும் இந்தியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
VIDEO | Here’s what Tourism Minister of Maldives Ibrahim Faisal said on India-Maldives relations.
— Press Trust of India (@PTI_News) May 6, 2024
“We have a history. Our newly elected government also wants to work together (with India). We always promote peace and a friendly environment. Our people and the government will… pic.twitter.com/xFgEkgEunv
சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், நம் இரு நாடுகளுக்கும் என ஒரு வரலாறு உள்ளது. எங்கள் நாடு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. நாங்கள் எங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு நல் வரவேற்பை அளிப்போம். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில், மாலத்தீவின் சுற்றுலாவில் தயவு செய்து பங்கு வகிக்குமாறு நான் இந்தியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பொருளாதாரம், சுற்றுலாவைத்தான் நம்பி உள்ளது என்று கூறியுள்ளார் மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சரான இப்ராஹிம் ஃபைசல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |