லண்டனில் டீன் ஏஜ் பெண்ணை கடத்த முயன்ற 50 வயதான நபர்! பேருந்துக்காக காத்திருந்த அப்பெண் செய்த சாதுர்யமான செயல்
லண்டனில் டீன் ஏஜ் பெண்ணை கடத்தி செல்ல முயன்ற 50 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tottenhamல் தான் இச்சம்பவம் நேற்று மாலை 4.43 மணிக்கு நடந்துள்ளது. அப்போது பேருந்துக்காக காத்திருந்த டீன் ஏஜ் பெண் அருகே 50 வயதான நபர் வந்திருக்கிறார்.
பின்னர் அவரிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியதோடு என்னுடன் வா என டீன் ஏஜ் பெண்ணை அழைத்தார். ஆனால் சாதுர்யமாக அங்கிருந்து உடனே ஓடிய அப்பெண், அந்த நபரிடம் இருந்து தப்பித்தார்.
இதைதொடர்ந்து பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் கூறுகையில், அப்பெண் உடல் ரீதியாக காயமடையவில்லை ஆனால் அவர் மனரீதியாக மிகவும் வருத்தப்பட்டாள் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசார் குறித்த நபரை கைது செய்தனர், அவர் பெண்ணிடம் பேசும் போது கைவிலங்கு வைத்திருந்தார் எனவும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் தொடர்ந்து காவலில் உள்ளார்.
கடத்தல் முயற்சியை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருந்தால் தங்களை அணுகலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.