பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சமீபத்திய தகவல்
பிரித்தானியாவில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இலங்கையரான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இலங்கைப் பெண்
நேற்று முன்தினம், அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமையன்று, வேல்ஸ் நாட்டின் தலைநகரான Cardiffஇலுள்ள South Morgan Place என்னுமிடத்தில், பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார்.
யார் அவர்?
இந்நிலையில், அவர் இலங்கையைச் சேர்ந்த நிரோதா என்னும் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella (32) என தெரியவந்துள்ளது.
சிறிது நேரத்தில், Splott என்னுமிடத்தில் திசாரா (Thisara Weragalage, 37) என்பவரை நிரோதா கொலை தொடர்பாக பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
திசாராவும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |