கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்து கிடந்த இந்தியக் குடும்பம்: கடத்த உதவிய நபர் கைது
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர்களில் மற்றொருவர் தற்போது கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவுக்குள் உறைபனியில் நடந்தே நுழைய முயன்று உயிரிழந்த குடும்பம்
2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.
இந்தியக் குடும்பத்தை கடத்த உதவிய கைது
அந்தக் குடும்பத்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த உதவியவர்களில் ஒருவர், Fenil Patel என்பவர் ஆவார்.
அந்த சம்பவம் தொடர்பில் இந்த நபர் மீது இந்தியாவிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Fenil Patel, அமெரிக்கா, அல்லது கனடாவில் ரொரன்றோ, Ottawa மற்றும் வான்கூவர் முதலான இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் அல்லது தப்பியோடியிருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், Fenil Patel ரொரன்றோ புறநகர்ப்பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவருவதும், தன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, குடும்பத்துடன் வெளியே செல்வது என சாதாரணமான வாழ்ந்துவருவதும் தெரியவந்தது.
அவரைக் கைது செய்ய கனடாவை இந்தியா கோரியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
கூடவே Fenil Patelஐ நாடுகடத்த அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையின்பேரில் Fenil Patel கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |