பிரித்தானியாவில் மற்றொரு எம்.பி-க்கு கொலை மிரட்டல்!
பிரித்தானியா எம்.பி-க்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ், தேவாலயத்தில் நடத்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல்தாரி Ali Harbi Ali-ஐ கைது செய்து காவலில் எடுத்த பொலிசார், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை கொலைக்குப் பிறகு எம்.பி.க்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 16ம் திகதி Rhondda தொகுதிக்கான தொழிலாளர் கட்சி எம்.பி Chris Bryant-க்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.பி. சர் டேவிட் அமெஸ் மரணத்தை தொடர்ந்து மக்கள் கனிவாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தனக்கு இந்த கொலை மிரட்டல் வந்ததாக Chris Bryant கூறினார்.
இந்நிலையில், Chris Bryant-க்கு கொலை மிரட்டல் விடுத்த Bridgend கவுண்டியின் Pontycymer-ச் சேர்ந்த 76 வயதுடை சந்தேக நபரை கைது செய்ததாக சவுத் வேல்ஸ் பொலிசார் அறிவித்துள்ளனர்.