தூங்கிக்கொண்டிருந்த நபருக்கு வந்த மொபைல் அழைப்பு: கண் விழித்தபோது கண்ட அதிரவைத்த காட்சி
நோர்வே நாட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவருக்கு மொபைலில் ஒரு அழைப்பு வந்தது. வீட்டு வாசலுக்கு வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அதிரவைத்த காட்சி
நோர்வேயின் Trondheim நகரில் வாழும் ஜோஹன் (Johan Helberg) என்பவருக்கு அதிகாலையில் மொபைலில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
கஷ்டப்பட்டுக் கண் விழித்த அவரிடம் மொபைலில் பேசியவர் உன் வீட்டு வாசலுக்கு வந்து பார் என்று கூற, கதவைத் திறந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அவரது வீட்டு வாசலில் ஒரு பிரம்மாண்ட கப்பல் நின்றுகொண்டிருந்திருக்கிறது.
விடயம் என்னவென்றால், அந்த 135 மீற்றர் நீள கப்பலை ஓட்டிக்கொண்டிருந்தவர் தூங்கிவிட, கப்பல் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஜோஹன் வீட்டு வாசலிலிருந்த தோட்டத்தில் மோதி நின்றுள்ளது.
ஒருவேளை அந்தக் கப்பல் வீட்டின் மீது மோதியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம்.
கப்பலை இயக்கிவரை பொலிசார் விசாரிக்க, அவர் நான் தூங்கிவிட்டேன் என்று கூற, பொலிசார் அவரை கைது செய்து விசாரித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |