இறந்தவர் சடலத்தை தோண்டி எடுத்து... பொதுவெளியில் நெருப்பு வைத்த மக்கள்: வெளியான காரணம்
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில், இறந்தவர் சடலத்தை தோண்டி எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சடலத்தை தோண்டி எடுத்து
குறித்த நபர் தன் பாலின ஈர்ப்பாளர் என்ற தகவல் வெளியான நிலையிலேயே, திரண்ட பொதுமக்கள் அந்த நபரின் சடலத்தை தோண்டி எடுத்து நெருப்பு வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து திங்கட்கிழமை நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். நெருப்பு வைக்கப்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்துள்ளனர்.
31 வயதான Cheikh Fall என்ற அந்த நபர் இறந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மத்திய செனகல் நகரமான கயோலாக்கில் உள்ள லியோனா நியாசென் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
நாம் பொறுப்பேற்க முடியாது
இஸ்லாமிய முறைப்படி, அந்த நபர் பிறந்த நகரிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முயன்ற நிலையில், அதிகாரிகள் தரப்பு அந்த நபர் தன் பாலின ஈர்ப்பாளர் என்பதால் மறுத்துள்ளனர்.
பின்னர், அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மயானத்தில் ரகசியமாக அடக்கம் செய்தனர். இருப்பினும், 24 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பெரும் கூட்டத்தால் தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் செனகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத தலைவர்கள் பலர் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாம் பொறுப்பேற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |