7 நாட்கள் பெற்றோர்களை தோளில் சுமந்து வந்த அன்பு மகன்! எதற்காக தெரியுமா? இணையத்தை கலக்கும் ஒற்றை புகைப்படம்
மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை இளைஞர் ஒருவர் தனது பெற்றோர்களை 7 நாட்களாக சுமந்து வந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த நிகழ்வின் கதாநாயகரான இளைஞர் மியான்மரை சேர்ந்தவர். இவர் மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை தனது பெற்றோருடன் நடைப்பயணமாக புறப்பட்டுள்ளார்.
ஆனால் பெற்றோர் இருவரும் வயதானவர்கள் என்பதால் அவர்களால் நடக்கமுடியாத காரணத்தினால் தனது தோள்பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை போல் கட்டி அதில் தனது வயதான பெற்றோர் இருவரையும் உட்கார வைத்து சுமந்து வந்துள்ளார்.
மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை சுமார் 7 நாட்கள் இருவரையும் அந்த இளைஞன் சுமந்து வந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
This man from Myanmar carried his parents for 7 days to his destination in Bangladesh as his parents were unable to move. #humanspirit pic.twitter.com/WzwByjg0Zj
— Harsh Goenka (@hvgoenka) September 10, 2021
அது மட்டும் இல்லாமல் அந்த இளைஞனை நவீன காலம் ஷ்ரவண் குமார் என பலரும் பாராட்டி தள்ளுகின்றனர். இளைஞரின் அசத்தலான செயல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.